புதுச்சேரியில் ஆபாச படம் காட்டிய ஆசிரியர்கள் : பாலியல் வன்புணர்ச்சி சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்..!
புதுச்சேரி, நவ.30,2013.

ஆபாச படம் காட்டிய 4 ஆசிரியர்களை பாலியல்
வன்புணர்ச்சி சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி புதுச்சேரியில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அரசு
பள்ளியில் கணினியில் மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த 4 ஆசிரியர்களை
பாலியல் வன்புணர்ச்சி சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது
செய்ய வேண்டும். நான்கு ஆசிரியர்களை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க
வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
புதுச்சேரி
கல்வித்துறை அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேச தலைவர் தெய்வானை தலைமை
தாங்கினார். இந்திய மாணவர் சங்க பிரதேச துணைத்தலைவர் ரஞ்சித் முன்னிலை
வகித்தார்.மாதர் சங்க பிரதேச துணைத்தலைவர் சுமதி, டிஒய்எப்ஐ பிரதேச தலைவர்
ஆர்.சரவணன், மாணவர் சங்க பிரதேச செயலாளர் ஆனந்து ஆகியோர் கண்டன
உரையாற்றினர்.
மாதர் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, சந்திரா,
ஜெயலட்சுமி, வாலிபர் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், அழகப்பன், நாகமுத்து
உள்ளிட்ட திரளான மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக
புதுச்சேரி மகளிர் ஆணையத்தை செயல்படுத்தக்கோரி முழக்கமிட்டனர்.
ஆசிரியர்கள் இடைநீக்கம்:கல்வித்துறை நடவடிக்கை
இந்நிலையில் ஆபாச படம் காண்பித்த ஆசிரியர்கள் நான்கு பேரையும் புதுச்சேரி கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நன்றி:தீக்கதிர்...!